மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மாநில முதல்வருக்கே கொரோனா பாதித்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொரோனா தொற்று:
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான், ‘என் அன்பான நாட்டு மக்களே, நான் # COVID19 அறிகுறிகளைக் கொண்டிருந்தேன், சோதனைக்குப் பிறகு எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. என்னுடன் யார் தொடர்பு கொண்டாலும், அவர்களும் கொரோனா பரிசோதனையைச் செய்யுங்கள் என்று எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எனக்கு நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தலுக்குச் செல்கிறார்கள்’ என தெரிவித்து உள்ளார்.
मेरे प्रिय प्रदेशवासियों, मुझे #COVID19 के लक्षण आ रहे थे, टेस्ट के बाद मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। मेरी सभी साथियों से अपील है कि जो भी मेरे संपर्क में आए हैं, वह अपना कोरोना टेस्ट करवा लें। मेरे निकट संपर्क वाले लोग क्वारन्टीन में चले जाएँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020