கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், அந்தக் கூட்டத் தொடரில் 3 நாள் பங்கேற்ற சட்டசபை உறுப்பினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகக்கவசம் அணியவில்லை
புதுச்சேரியில் முதல் முறையாகச் சட்டசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கிழக்கு லடாக்கிலிருந்து படைகள் வாபஸ் – சீனா ஒப்புதல்!! கதிர்காமம் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினரான ஜெயபாலுக்கு கொரோனா தொற்று இருப்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜெயபால் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் பங்கேற்ற 4 நாட்களும் முகக்கவசம் அணியவில்லையாம்.
என்.ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலன்
முன்னதாக என்.ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்த சட்டசபை உறுப்பினர்கள் உள்பட அனைத்து அதிகாரிகளளும் அச்சமடைந்துள்ளனர்.
முதல்வருக்கு பரிசோதனை
முதல்வர் நாராயணசாமி உள்பட அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே புதுச்சேரி சட்டசபை கூட்டத்திற்கு வந்த பலர் முகக் கவசம் அணியவில்லை என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.