இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் ராஜ்காட் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் 5 வயது சிறுமி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்தியப் பிரதேசம் ராஜ்காட் பகுதியில் ஒரு 5 வயது சிறுமி அதிகாலை 5 மணியளவில் சென்ற போது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உட்பட காவல்துறை மற்றும் மீட்பு பணியாளர்கள் விரைந்து வந்து அந்த சிறுமியை காப்பாற்ற போராடினர். கிட்டத்தட்ட 9 மணி நேர போராட்டத்துக்கு பின் அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றினார்கள்.