தமிழகத்தில் தற்போது முதல்வர் பதவியை ஏற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய முழு விவரம் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
தமிழகத்தில் தனி பெரும்பான்மையை பெற்று வெற்றி பெற்ற திமுக கட்சி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றார். பதவி ஏற்ற பின்பு முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவரில் இருந்து ஸ்டாலின் முதல்வராகியுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அம்சங்கள் மாற்றியாக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு தற்போது கோர்ச்செல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கோர்ச்செல் என்பது ஒரு ஏடிஎஸ்பி, இரண்டு டிஎஸ்பி மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுக்கள் ஒரு நாளுக்கு 3 ஷிப்டுகள் மாறி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவர்கள் சஃபாரி உடை அணிந்து, மெய்காவலர்கள் என்று அழைக்கப்படுவர். மேலும் SCP எனப்படும் சென்னை போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
நிலுவையிலுள்ள 2 மாத இலவச ரேஷன், உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை – புதிய முதல்வர் அதிரடி!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர்கள் தலைமை செயலகத்தில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் பணியில் ஈடுபட்டு வருவர். மேலும் மோப்ப நாய் சோதனை, ஜாமர்கள் போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். அதேபோல் சென்னை மாநகர போலீஸ், ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும். இவர்கள் விழாக்களில் பாதுகாப்பு பணிகளை கவனிப்பர். மேலும் இனி கான்வாய் எனப்படும் காரில் தான் முதல்வர் பயணம் செய்வார். இந்த கார் குண்டுகள் துளைக்க முடியாத அளவில் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.