நிலுவையிலுள்ள 2 மாத இலவச ரேஷன், உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை – புதிய முதல்வர் அதிரடி!!

0

புதுவை பகுதியில் இன்று பிற்பகல் என்.ஆர்.ரங்கசாமி ஆளுனர் மாளிகையில் 4வது முறை முதல்வர் பதவியை ஏற்றார். இதனை அடுத்து தற்போது அவர் முக்கிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். தற்போது அதனை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

புதுவை முதல்வர்:

புதுவையில் தேர்தலுக்கு முன்பு நாராயணசாமி முதல்வராக திகழ்ந்தார். பின்பு பல அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து வந்த நிலையில் அவரது ஆட்சி அங்கு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதன் காரணமாக புதுவையில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து புதுவையில் கடந்த மே மாதம் 2ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

வாக்கு எணிக்கையின் முடிவில் என்.ஆர்.ரங்கசாமி புதுவையின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி தற்போது குடியரசு தலைவரின் ஆட்சி கடந்து மக்கள் ஆட்சி மீண்டும் உதித்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் ரங்கசாமி ஆளுநர் முன்னிலையில் முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். தற்போது முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட ரங்கசாமி முக்கிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் புதிய செயலாளர்கள் – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் விண்ணப்பித்த முதியோர், விதவைகள் 10 ஆயிரம் பேருக்கு புதியதாக பென்ஷன் வழங்கப்படும் என்றும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சென்டாக் உதவித்தொகை வழங்குவதற்கான முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here