முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மதுரையில் வசித்து வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததில் இருந்து சென்னையில் வகித்து வருகிறார். தற்போது துரை தயாநிதி தொழிலதிபராக இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே குடும்பத்தினர் அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு இருப்பது கண்டறிந்துள்ளனர். மேலும் அதற்கான அறுவை சிகிச்சையும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் 15 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
ரேஷன் அட்டைதாரர்களே., கிறிஸ்துமஸ் அன்று ரேஷன் கடை அடைப்பு., கமிஷன் நிலுவை கண்டித்து போராட்டம்!!!