ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலைகளில் பொதுமக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களுக்காக ரேஷன் ஊழியர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான கமிஷன் தொகை மற்றும் கிறிஸ்துமஸ்காக கிப்ட் வழங்கியதன் கமிஷனும் கேரளா கோழிக்கோடு பகுதி ரேஷன் ஊழியர்களுக்கு கொடுக்கவில்லை.
இதனால் ரேஷன் கடை உரிமையாளர்கள் நவ கேரள சதஸில் புகார் கொடுத்திருந்தனர். ஆனால் கமிஷன் வழங்கப்படுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நிலுவையில் உள்ள கமிஷன் தொகை வழங்கும் வரை ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகம் செய்ய மாட்டோம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு கிடங்கில் முன்பணம் செலுத்தி அரிசி ஆட்டா உள்ளிட்டவற்றை வாங்கி விநியோகிக்க மாட்டோம் என ரேஷன் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., ஆனா ஆசிரியர்கள் வரணும்., அதிரடி உத்தரவு!!!