தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை (டிச.11) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
அன்றைய தினம் அரையாண்டு தேர்வும் தொடங்க உள்ளதால், பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருந்தாலும் இன்று (டிச.8) ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி 6 வகுப்பு சேர்க்கைக்கு இது கட்டாயம் தேவை.., மாநில அரசு அதிரடி!!