இன்றைய டிஜிட்டல் வளர்ச்சிபெற்ற காலத்தில் சாலையோர கடை முதல் அனைத்து இடங்களிலும் G Pay, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் லட்சக்கணக்கான தொகையை செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது வங்கி எண், IFSC உள்ளிட்டவை கட்டாயமாகிறது. இதனால் யுபிஐ லிமிட்டை அதிகப்படுத்த வேண்டும் என பலரும் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து கிரெடிட் கார்டு தவணை, மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு பிரீமியம் ஆகியவற்றுக்கு ஒரு முறை UPI பரிவர்த்தனை ரூ.1 லட்சம் வரை செலுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதேபோல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முன்னதாக ரூ.1 லட்சம் வரை பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்த நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மு.க.அழகிரி மகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி.., அப்படி என்னதான் ஆச்சு? டாக்டர் விளக்கம்!!