பஞ்சாப் அணியை பஞ்சாக பறக்க விட்ட லக்னோ…, டாப் 2 இடத்தை தட்டி சென்று அசத்தல்!!

0
பஞ்சாப் அணியை பஞ்சாக பறக்க விட்ட லக்னோ..., டாப் 2 இடத்தை தட்டி சென்று அசத்தல்!!
பஞ்சாப் அணியை பஞ்சாக பறக்க விட்ட லக்னோ..., டாப் 2 இடத்தை தட்டி சென்று அசத்தல்!!

ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிராக லக்னோ அணி, இமாலய ஸ்கோரை குவித்ததோடு, 56 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல்:

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான 38 வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய, லக்னோ அணியில் தொடக்க வீரரான கே எல் ராகுல் 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றிய போதும், மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்து அசத்தியது. இதில், அதிகபட்சமாக, மார்கஸ் ஸ்டோனிஸ் 72, கைல் மேயர்ஸ் 54, ஆயுஷ் படோனி 43, நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி இருந்தனர். இந்த கடின இலக்கை துரத்த தவான் தலைமையிலான பஞ்சாப் அணி களமிறங்கியது.

இதில், பஞ்சாப் அணி லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 19.5 ஓவரில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், லக்னோ அணி, ஐபிஎல் வரலாற்றில், ஓர் அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. மேலும், இந்த போட்டியின் வெற்றியால், லக்னோ அணி, புள்ளி பட்டியலில், 4 வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப் அணியோ 6 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here