தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பரவலின் வீரியம் சற்றே குறைந்து வருகிறது. அந்த வகையில், நாளொன்றுக்கு 500 என பதிவு செய்யப்பட்டு வந்த தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் இப்போது 300 ஆக குறைந்துள்ளது மக்களை சற்றே நிம்மதி அடையச் செய்துள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 343 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 3 ஆயிரம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சர்பிரைஸ் விசிட் கொடுத்த விஜய்….,’வா தலைவா, வா தலைவா’….,
இதற்கு முன்னதாக, தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விகிதம் 382 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை கவனத்தில் கொண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொது மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது கவனிக்கத்தக்கது.