இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி, தனது கடைசி லீக் போட்டியில் கால்பந்து
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது, இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. தற்போது 16 வது சீசனும் இறுதிக்கட்ட லீக் சுற்றுகளை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இதில், கடந்த சீசனில் முதன் முதலாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நடப்பு தொடரிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி நுழைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, லக்னோ அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தற்போது வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பாராமல் இந்த பிளே ஆப் வாய்ப்பை லக்னோ அணி உறுதி செய்ய வேண்டுமானால், கடைசி லீக் போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த கடைசி லீக் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மே 20ம் தேதி லக்னோ அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில், கொல்கத்தாவின் பிரபல கால்பந்து மோகன் பாகன் அணிக்கு லக்னோ அணி தங்களது பணிவான அஞ்சலியை செலுத்த உள்ளது. அதாவது, மோகன் பாகன் அணியின் ஜெர்சி நிறத்தில் தங்களது ஜெர்சியை மாற்றியமைத்து லக்னோ அணி களமிறங்க உள்ளது. இதனை தனது அதிகாரப்பூர்வ டிவீட்டர் பக்கத்தில் லக்னோ அணி பகிர்ந்துள்ளது.
Lucknow Super Giants will be wearing Mohun Bagan colour jersey for their last league match. pic.twitter.com/GdGiTl7ckk
— Johns. (@CricCrazyJohns) May 18, 2023