பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபி தன்னை விட்டு போய்விடுவாரோ என்ற பயத்தில் தேவையில்லாமல் பாக்கியாவிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் இதற்கு கொஞ்சம் கூட அசராத பாக்கியா நான் இப்போ தான் என் லைஃப்ல நல்ல நிலைமைக்கு வரேன். நான் இனி யாரை பற்றியும் யோசிக்கிறதா இல்ல. நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க என்று சொல்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனாலும் ராதிகாவுக்கு மனசுக்குள் ஏதோ நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நேரத்தில் அடுத்து வரும் எபிசோடில் கோபி கொஞ்சம் கொஞ்சமாக தன் குடும்பத்துடன் சேர துடிப்பாராம். அது மட்டுமல்லாமல் குடும்பம் சந்தோஷமாக இருப்பதை பார்த்து இவ்வளவு அழகான வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டு ராதிகாவை கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறோமே என நினைப்பாராம். இதை தெரிந்து கொண்ட ராதிகாவும் தினமும் கோபியிடம் சண்டை போடுவாராம்.
கால்பந்து அணியாக மாறும் ஐபிஎல்லின் லக்னோ…, கொல்கத்தாவுக்கு எதிராக கடைசி லீக்கில் மோத திட்டம்!!
ஒரு கட்டத்தில் ராதிகாவின் இம்சையை தாங்க முடியாமல் கோபி உனக்கு பாக்கியா எவ்வளவோ மேல் என சொல்லி விடுவாராம். இதை கேட்க ராதிகா மனம் தாங்க முடியாமல் இந்த வார்த்தையை சொன்ன நீங்கள் இனி எனக்கு தேவையில்லை என்று சொல்வாராம். அது மட்டுமல்லாமல் பாக்யாவிடம் இனி எனக்கு அந்த ஆள் வேண்டாம். நான் என் வாழ்க்கையை பார்த்துக்கிறேன் என்பாராம்.