பெரும்பாலானவர்கள் தங்களது இழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடிகளை குடும்பத்தினர் ஈடுசெய்ய வேண்டும் என பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை அணுகுவது வழக்கம். ஆனால் காதலர்களுக்கு இடையே பிரேக் அப் ஏற்பட்டால் ஏமாற்றப்பட்டவர் பிரிவின் வேதனையை சமாளிக்க முடியாமல் மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் துயரப்படுவார்கள். இவர்களின் துயரத்தை குறைக்கும் வகையில் பிரேக் அப் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் மூலம் ரூ.25,000 வரை பாலிசி பணத்தை பெற்றுள்ளேன் என பிரதீக் ஆர்யன் என்பவர் ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதாவது இந்த காப்பீடு திட்டத்தின் படி காதலர்கள் இருவரும் மாதந்தோறும் ரூ.500 பாலிசி தொகையை செலுத்த வேண்டும். ஒருவேளை காதல் முறிவு ஏற்படும் பட்சத்தில் பாலிசியின் மொத்த தொகையும் ஏமாற்றப்பட்டவருக்கு வழங்கப்படும்.
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டண விவகாரத்தில் அதிரடி முடிவு.., அமைச்சர் பொன்முடி தகவல்!!
எனவே இந்த பாலிசியை பிரதீக் ஆர்யன் மற்றும் அவரது காதலியும் காதலிக்கும் போதே எடுத்துள்ளனர். தற்போது பிரதீக் ஆர்யன் ஏமாற்றப்பட்டதால் பாலிசியின் படி ரூ.25,000 கிடைத்துள்ளதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு “இந்த பணத்தை வைத்து அடுத்த காதலுக்கு முதலீடு செய்து கொள்ளலாம் போன்ற பல்வேறு கேளிக்கை கருத்துக்களும் பதிவிட்டு வருகின்றனர்.