தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு அரசு கலை கல்லூரிகளிலும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் கல்லூரி ஆசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பழைய தேர்வு கட்டணத்தையே வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக செலுத்தப்பட்டு வரும் தேர்வு கட்டணத்தையே மாணவர்கள் செலுத்தினால் போதும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதேபோல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கட்டணங்கள் முறையை ஆராய குழு அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களிடம் ஒரே மாதிரியான கட்டணங்களையே வசூல் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.