பிக் பாஸ் மூலம் அறிமுகமான லாஸ்லியா தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் 3 இல் மக்கள் மத்தியில் இடம் பிடித்த லாஸ்லியா டாப் 3 இல் இடம் பெற்றவர். மேலும் லாஸ்லியா கவினுக்கு இடையே உள்ள காதல் விவகாரம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் தற்போது லாஸ்லியாவிற்கு அவர்கள் வீட்டில் மாப்பிளை பார்த்து வருகின்றனராம். இதனால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
லாஸ்லியா
இலங்கை பெண்ணான லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் லாஸ்லியா. இவருக்கென்று தனி ஆர்மியே உருவானது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி என்றே அழைக்கப்பட்டார். மேலும் இவரின் இலங்கை தமிழுக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இப்படி போய்க்கொண்டிருந்த லாஸ்லியாவின் பிக் பாஸ் பயணத்தில் திடீரென ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அதாவது இவருக்கும் கவினுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு தான். ஆரம்ப காலகட்டத்தில் நட்பாக பழகிய இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இவர்களுக்கும் ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே பல சண்டைகள் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் இருந்த லாஸ்லியாவின் புகழ் அப்படியே தலைகீழாக மாறியது. மேலும் இரவு பகல் என்று கூட பாராமல் பிக் பாஸ் வீட்டில் இருவரும் காதலித்து வந்ததை நாம் கண்கூடாக பார்த்தோம். இந்நிலையில் தற்போது லாஸ்லியாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனராம். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கனடாவில் உள்ள லாஸ்லியா தந்தையின் நண்பனின் மகனை பேசி முடித்துள்ளனராம்.