T20 உலக கோப்பை நடைபெறும் ஆசுத்திரேலியா மைதானம் பற்றி, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டி அளித்துள்ளார்.
T20 உலக கோப்பை
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் முடித்துவிட்டு அடுத்ததாக உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் முடிவடைந்த பிறகு பேட்டி அளித்தார். அந்த போட்டியில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தொடர்ந்து பேசிய அவரிடம் உலக கோப்பை பற்றி கேட்டதற்கு, அவர் நான் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை.மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் நான் முதல் முறையாக விளையாட போவதால் எனக்கு உலக கோப்பை போட்டி மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உலக கோப்பை தொடருக்காக மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 119 ரன்கள் உட்பட இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திறமையாக விளையாடும் வீர டி20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.