நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு, ஹோட்டல்களில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
என்னது., ரவீந்தர் மகாலட்சுமி பிரிஞ்சுட்டாங்களா? அவரே போட்ட வைரல் பதிவு!!
இந்த நடவடிக்கையை ஹோட்டல் உரிமையாளர்களுடன் தேர்தல் ஆணையம் இணைந்து எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்திய பிறகு, விரலில் வைக்கும் மையை காண்பித்து, அன்று மாலை முதல் 20ஆம் தேதி வரையிலும், இந்த தள்ளுபடி சலுகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.