2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தனிநபர் சுதந்திரம் உள்ளது. எனவே விலை உயர்ந்த சொத்துக்கள் குறித்த விவரங்களை சமர்பித்தாலே போதும்.” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.