இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதாக திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, சமீபத்தில் டெல்லியில் கைது செய்தனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் இயக்குனர் அமீரிடம், டெல்லி என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டியிருக்கும் என கூறி இருந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 9) காலை திடீரென அமீர், ஜாபர் சாதிக் ஆகியோருக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை இரவு வரை சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரையில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அமலாக்கத்துறை ஒரு சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக கூறியுள்ளார். அது தொடர்பான விவரங்களை அவர்கள் தான் சொல்ல வேண்டும். விசாரணைக்கு அழைத்தால், எப்போதும் தயாராகவே உள்ளேன்.” என கூறி உள்ளார்.