நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகலாம் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் 20ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.