இறந்துபோய் 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பிரபல இயக்குனர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
தற்போதைய  காலங்களில் மக்களிடையே  மனஅழுத்தம்  என்ற விஷயம்  அதிகரித்து வருவதால், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும், மனஉளைச்சலாலும் தற்கொலை  செய்யும் எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர்.  இதனால் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது கேரளாவில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கேரளா மாநிலம் வயநாட்டில் இயக்குனர் பிரகாஷ் கேலரி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனது வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்ததால், அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள மக்கள் சந்தேகப்பட்டு வீட்டு கதவை தட்டி உள்ளனர்.  நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை என்பதால், கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அப்பொழுது இயக்குனர் பிரகாஷ் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதை அடுத்து காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அவரது உடலை கைப்பற்றி, தற்கொலையா அல்லது யாராவது அவரை கொலை செய்து விட்டார்களா என்ற விசாரணையை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here