ஒரே நாளில் 50 ஆயிரம் ஹெக்டேர்கள் காலி – இந்திய விவசாயிகளை கதற விடும் வெட்டுக்கிளிகள்..!

0

வட இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்கம் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவை விட அதிகமாக உள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஹெக்டேரில் பயிர்கள் நாசமடைவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு:

வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமான அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துவது பாலைவன வெட்டுக்கிளிகள். ஆப்ரிக்காவை பூர்விகமாக கொண்ட இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுர மைல் அளவிற்கு ஒரே கூட்டமாக இறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணக்கூடிய அளவுள்ள பயிர்களை நாசம் செய்யக்கூடியது. இந்த ஆக்ரோஷ வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளது. பாகிஸ்தானில் இருந்து படையெடுத்து ராஜஸ்தானில் நுழைந்துள்ள இவை 50 ஆயிரம் ஹெக்டேர்களுக்கு மேல் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

ஆரம்பத்தில் எல்லையோர மாவட்டங்களில் உள்ள பூ, காய், பலம் மற்றும் தண்டு என ஒன்று விடாமல் அனைத்து பயிர்களையும் தின்று தீர்த்து இன்று ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களிலுள்ள பாதி பயிர்களை ஆக்கிரமித்து உள்ளது. இவற்றை பூச்சி மருந்து அடித்து கொல்வதற்கு சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பொழுதும் அவை போதவில்லை. தற்போது மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்துள்ள இவை அடுத்த படியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும் தாக்குதல் நடத்தும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here