தமிழகத்தில் இன்றும் நாளையும் ஊரடங்கு ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஊரடங்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கை:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில் தற்போது முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் விதிக்கப்படும் சில தளர்வகள் மற்றும் கட்டுப்பாடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு மற்ற அனைத்து துறைகளுக்கும் தடை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தமிழக அரசிற்கு மக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ள சூழலில் இன்று மற்றும் நாளை ஊரடங்கு அமலில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here