ஊரடங்கு ரத்துக்கு இது தான் காரணமா??

0

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு கிடையாது என்றும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு ரத்து:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை அதாவது இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்காது என்று தமிழக அரசு அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று மற்றும் நாளை அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

இதன் காரணமாக தமிழகத்தில் மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள், நிறுவனங்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்கு மட்டுமே இந்த இரண்டு நாட்கள் அனைத்து துறைகளும் வழக்கம் போல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here