ஹிமாச்சல பிரதேசத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஹிமாச்சல பிரதேசத்தில் இதுவரை 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்து 63 பேர் வீடு திரும்பி உள்ளனர். அம்மாநிலத்தில் அதிகபட்சமாக ஹமிர்பூரில் 63 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் அம்மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசு பிறப்பித்து உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிய உள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை விலக்கிக்கொண்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூக பரவலாக மாறி விடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதலவர் அறிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |