கொரோனவை வென்ற ஜப்பான் – அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி..!

0

ஜப்பானில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

ஜப்பானில் கொரோனா:

ஜப்பானில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதற்கு அங்கு விதிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தான் காரணம். கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 16,581 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 830 பேர் உயிரிழந்து உள்ளனர். ஜப்பானில் 13,612 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதையொட்டி டோக்கியோ உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களைத் தவிர்த்து மற்ற நகரங்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் டோக்கியோ உள்ளிட்ட அனைத்து நகரங்களுக்கும் அனைத்து வித கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது. இத்துடன் அவசர நிலையும் விலக்கிக் கொள்ளப்பட்டதால் ஜப்பான் மக்கள் மகிழ்ச்சியுடன் இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here