தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 234 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் AK விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு..!
இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சரவை செயலர், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக தலைநகர் சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சென்னையில் 144 தடை உத்தரவு வருகிற 15ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |