தமிழகத்தில்  ஜன 30ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…, ஆட்சியர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில்  ஜன 30ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..., ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி 177 வது சங்கீத மும்மூர்த்திகளின் தியாகராஜர் ஆராதனை திருவிழா தொடங்க இருக்கிறது. மேலும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மங்கள இசை ஜனவரி 30 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் நடைபெற உள்ளது
மேலும் அதைத் தொடர்ந்து கர்நாடக இசைக் கலைஞர்கள்  பாடல்களை பாடி தியாகராஜருக்கு இசை மூலம் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதனால் இவ்விழாவில் பொதுமக்கள்  அனைவரும் கலந்து கொள்ள வேண்டி வரும் ஜனவரி 30 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேகப் அறிவித்துள்ளார்.  மேலும் ஜனவரி 30 ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 10 ஆம் தேதி  வேலை நாளாக  இருக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here