இந்தியாவில், ஐபிஎல், ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி, இரானி கோப்பை உள்ளிட்ட பல உள்ளூர் போட்டிகள் பிசிசிஐ யால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரஞ்சி டிராபி 2024 தொடர் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அஜிங்கிய ரஹானே 0 (1) கோல்டன் டக் ஆகி, படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்.
இவர் கடந்த போட்டியிலும் கோல்டன் டக் ஆனார். அதேபோல், இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், இந்திய டெஸ்ட் அணியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இருந்தார். ஆனால் இவர் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே எதிர்வரும் போட்டியில் ரஹானே சிறப்பாக செயல்பட்டு விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.