இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் பெறப்படும் ஓய்வூதிய தொகையை உயர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
இதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதிய தொகை ரூ.5,000லிருந்து ரூ.7,000ஆக உயர்த்தப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் இத்திட்டத்தில் இணைந்திருக்கும் 5.3 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் ஜன 30ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…, ஆட்சியர் அறிவிப்பு!!