இன்றைய காலகட்டத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் திருமணம் செய்து கொள்ளாமலே, ஒரு பெண் ஆணுடன் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற உறவில் உள்ளவர்கள் பிரிந்து செல்ல நேரும் பட்சத்தில், அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்குவது குறித்த வழக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் நீண்ட காலம் சேர்ந்து இருந்த ஆண் மற்றும் பெண் பிரிய நேரிட்டால், அந்த பெண் ஜீவனாம்சம் பெற தகுதி உடையவர் ஆவார்.” என உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு பலர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
2024 TET தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!