தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதில் மாணவர்களுக்கு இருக்கைகள், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளையும் தேர்வுகள் இயக்ககம் மேம்படுத்தி இருந்தது. மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வு மையத்தில் தனியாக இருக்கைகளும் அமைக்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதேபோல் தேர்வு மையத்தில் மாணவர்களின் வருகைப்பதிவுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதன்படி இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய மொழிப்பாட தேர்வு மதியம் 01.15 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வெழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் தேர்வில் வினாத்தாள் குறித்து கலவையான விமர்சனங்களையே தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்து இருந்தனர்.