தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அரசு அதிரடியாக மூடிய நிலையில், தற்போது மேலும் 275 டாஸ்மாக் கடைகளை மூட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 500 கடைகளை அரசு மூடியதால், அதன் மூலம் வந்த வருமானத்தை ஈடுகட்டும் விதமாக மது வகைகளின் விலையை உயர்த்தி அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும், முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயரத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதேபோல் பீர் பாட்டில் விலையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு., TN MRB வெளியீடு!!!