மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும் சிறப்பு முகாமில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்ளும் நிலையில் இதனை, அதிகப்படுத்த மாவட்ட அதிகாரி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
சிறப்பு முகாம்:
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கட்டாயமாக்கியதால் தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இம்முகாமில், அதிகாரிகள் முழுமூச்சுடன் இறங்கி பொதுமக்களுக்கான இந்த சேவையை நிறைவேற்றி வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த முகாம் டிசம்பர் 31 வரை நடைபெற உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று நெரிசல் இல்லாமல் கட்டணம் பெறாமல் இந்த சேவையை செய்து வருகின்றனர். மேலும் மின்வாரிய அலுவலகங்களுக்கு செல்ல இயலாதவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
தமிழகத்தை மிரட்ட வரும் புதிய புயல்? எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு தெரியுமா? வெளியான அறிக்கை!!
இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டத்தில் பொதுமக்களுக்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வாகன பேரணி தொடங்கப்பட்டது. மின் பொறியாளர் குருசாமி உட்பட அனைத்து மின் அலுவலர் முன்னிலையில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. அரசு இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.