மாண்ட்ஸ் புயலை தொடர்ந்து மீண்டுமொரு புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு:
வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மாண்ட்ஸ் புயலாக உருவெடுத்து சூறாவளி காற்றுடன் கனமழையை கொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது . இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டது .
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து தற்போது தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு நிலை உருவாகும் பட்சத்தில் இலங்கையை ஒட்டிய மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலில் கலக்கும் என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளம் திடீர் மூடல்., பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக அறிவிப்பு!!
இதைத்தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு உருவாகும் நிலை உள்ளதால் அடுத்த சில மணிநேரங்களுக்கு தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.