நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்களும் பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சேமிப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது LIC பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC அறிமுகப்படுத்தியுள்ள கன்யதான் திட்டத்தின் முதிர்வு காலம் 25 வருடங்கள் ஆகும். இத்திட்டத்தின் கீழ் தினமும் 121 ரூபாய் சேர்த்தால் மாதத்திற்கு ரூபாய் 3600 சேமிப்பாகும். அதன்படி 25 வருடத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருப்போம். ஆனால் நமக்கு இந்த 25 வருடத்திற்கு தேவையான வட்டியுடன் சேர்த்து ரூபாய் 27 லட்சம் கிடைக்கும். இது பெண்களின் எதிர்கால தேவைக்கு மிகப்பெரிய சேமிப்புத் தொகையாக அமையும் என கருதப்படுகிறது.