ஏழை மக்கள் எளிய முறையில் உணவு, மருத்துவம் போன்ற அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்துணவு பெட்டி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை போன்ற சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெண் ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்து பல்வேறு கனவுகளை சுமந்து இருக்கும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் சில நேரங்களில் துக்க நிகழ்வுகளும் நிகழ்ந்து விடுகிறது.
இப்படியாக பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்தால் தாய்மார்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த வேதனை அடைவர். இதனால் மத்திய அரசு பணிகளில் உள்ள பெண் ஊழியர்களின் பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்து 28 நாட்களுக்குள் இறந்தாலோ 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.