பிரபல கிறிஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடுகள் செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரித்துறை சோதனை:
பிரபல கிறிஸ்துவமத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் 2 வது வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு மாற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் நடத்தப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று 20 வருமான வரி துறை அதிகாரிகள் தங்களது சோதனையை துவங்கினர்.
சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை – கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!!
அதைத்தொடர்ந்து அந்த அமைப்பின் கிளை நிறுவனங்களான பாரிமுனை, வானகரத்திலிருக்கும் ஜெபகோபுரம் அலுவலகம், மற்றும் அடையாறில் உள்ள பால்தினகரன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் கோவையிலுள்ள காருண்யா பல்கலைக்கழகத்திலும், பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை – கவலை அடையும் நகைப்பிரியர்கள்!!
மொத்தமாக பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சுமார் 200 அதிகாரிகள் நேற்றிலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 3 இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில் தற்போது மீதமுள்ள 25 இடங்களில் சோதனை தொடர்ந்து வருகிறது.