ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பவிருக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜனை 14 நாட்கள் சுயமாக தனிமை படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அறிவுரை:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்பவுள்ளார் . கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை காரணமாக கூறி அவரை வரவேற்க சேலத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையை அகற்றுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து விழா மேடையும் பந்தல்களும் அகற்றப்பட்டன. மேலும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து – உயிர் சேதம் உள்ளதா?? அதிர்ச்சி ரிப்போர்ட்!!
முன்னதாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாட்டு விதிகளின்படி நடராசன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் தன்னை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.