கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனமான சீரம் நிறுவனத்தில் இன்று மதியம் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது விபத்தில் ஏதும் உயிர் சேதம் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
சீரம்:
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் கோவிஷீல்டு என்னும் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்கு மருந்து கட்டுப்பாடு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தற்போது இந்த கோவிஷீல்டு தடுப்பூசியை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. சீரம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பூனேவில் உள்ளது. மேலும் அங்கு கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தும் அங்குள்ள கிடங்கில் சேமித்து வைத்தும் வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
திடீர் தீ விபத்து:
இன்று மதியம் யாரும் எதிர்பாராத வகையில் சீரம் நிறுவனத்தில் திடிரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் முதலாம் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தினால் அங்குள்ள பகுதிகள் கருமண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனி மதுபானத்திற்கு கட்டாய பில் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!!
மேலும் இந்த தீ விபத்து கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் இடத்தில் ஏற்படவில்லை என்றும் சீரம் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் கிடங்குகளில் எந்த விபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். தற்போது எதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விபத்தினால் ஏதும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் கண்டறியும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.