பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்திற்கு மற்றுமொரு புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. அந்த படத்தின் கதை தன்னுடையது என்று ரங்கதாஸ் என்பவர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
புதிய சிக்கல்
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவேண்டிய மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போய் தற்போது வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்வததற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே 100% பார்வையார்களை அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில் அரசும் அதனை ஏற்று அனுமதியளித்தது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் பல்வேறு தரப்பில் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக அரசு தனது முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டு 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. இதுவே பெரும் சிக்கலாக உருவெடுத்த நிலையில் காட்சிகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என படக்குழுவினர் ஆறுதலடைந்திருந்தனர்.
கதை திருடப்பட்டதாக சர்ச்சை
ஆனால் தற்போது மாஸ்டர் படத்திற்கு மற்றுமோர் சிக்கலாக ரங்கதாஸ் என்பவர் மாஸ்டர் படத்தின் கதை, 2017ல் தான் எழுதிய “நினைக்குமிடத்தில் நான்” என்று தலைப்பிடப்பட்ட தன்னுடைய கதையினை ஒத்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சையது முஸ்தாக் அலி கோப்பை போட்டி நாளை துவக்கம் – பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!
ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான படத்தின் டீசரை பார்த்ததும் தனக்கு இந்த சந்தேகம் வந்ததாகவும் அவர் தெரிவித்ததையடுத்து படம் ரிலீசாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இப்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. ஏற்கனவே கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களும் இது போன்ற பிரச்சனையை சந்தித்ததுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.