சையது முஸ்தாக் அலி கோப்பை போட்டி நாளை துவக்கம் – பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!

0

நாளை ஜனவரி 10 ம் தேதி முதல் சையது முஸ்தாக் அலி டி 20 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. இந்த போட்டி ஜனவரி 31 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

டி 20 போட்டி

கொரோனா ஊரடங்கில் விளையாட்டு போட்டிகள் ஏதும் நடத்தாத நிலையில் டிசம்பரில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான டி 20 போட்டிகள் நாளை துவங்கவுள்ளன.

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

இந்த போட்டிகளின் லீக் சுற்றுகள் ஜனவரி 10 முதல் 19 வரை நடைபெறவுள்ளன. 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் ஆட உள்ளனர். இந்த லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வாதோரதா, இந்தூர், மும்பை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. இந்த ஆட்டத்தின் குரூப் சுற்று நிறைவடையும் நேரத்தில் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

போட்டிகள் விவரம்

தமிழ்நாடு அணி பி பிரிவில் கொல்கத்தா அணியுடன் விளையாட உள்ளது. மேலும் கர்நாடக நடப்பு சாம்பியன் அணி ஏ பிரிவில் இடம் பெற்று பெங்களூர் அணியுடன் விளையாட உள்ளது. ஜனவரி 26 முதல் நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26, 27 தேதிகளில் காலிறுதியும், 29 ல் அரையிறுதியும், ஜனவரி 31 ல் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லீக் சுற்று நடைபெறும் ஆறு நகரங்களில் வீரர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்புக்கான வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here