மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 342 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்ஸிகோ கொரோனா உயிரிழப்பில் 4ம் இடம்..!
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,95,489 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 342 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,022 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கையில், முதல் மூன்று இடங்களில் முறையே, அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உள்ளதை அடுத்து 4ம் இடத்தில் மெக்ஸிகோ உள்ளது குறிப்பிடத்தக்கது.