பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டம், ஜூன் 10ம் தேதி தொடங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
முதல்வர் அதிரடி:
தமிழகத்தில் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது, ‘முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டம் ஜூன் 10 முதல் தொடங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இத்திட்டத்தில் 23 முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான இறுதிப்பட்டியல் மே 31 ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் இத்தொகை பயனர்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மக்களுக்கு ஜாக்பாட்.,இனி நிமிஷத்துக்கு ஒரு பஸ் கிடைக்கும்! போக்குவரத்து துறையின் திடீர் முடிவு!!
இத்திட்டத்திற்காக இந்த நிதி ஆண்டில் சுமார் 8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் பயனடைய உள்ளதாகவும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் மற்றும் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவானதாக இருக்க வேண்டும் என்றும், பெண்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.