பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கும் விதமாக, கேரளாவில் அமைந்துள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.
புதிய விதிகள்:
தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை, அரசின் சார்பாக ஊதியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தில் பெண்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, கேரளாவில் கொச்சின் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது. இங்கு பயிலும் மாணவிகள் 75 சதவீதம், வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே பருவ தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படும்.
தமிழகமா., தமிழ்நாடா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்! அவரே சொன்ன பொங்கல் வாழ்த்து!!
ஆனால், இதனை மாற்றி பெண்களுக்கான இந்த வருகைப்பதிவு விகிதத்தை 2% தளர்த்தி, 73% ஆக நிர்ணயித்துள்ளது. இந்த விடுமுறை தினங்களை, பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு, பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.