தமிழகமா., தமிழ்நாடா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்! அவரே சொன்ன பொங்கல் வாழ்த்து!!

0
தமிழகமா., தமிழ்நாடா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்! அவரே சொன்ன பொங்கல் வாழ்த்து!!

சமீப காலமாக, மிகப்பெரிய சர்ச்சைகளில் பேசப்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தன் மீதான விமர்சனங்களுக்கு தனது பொங்கல் வாழ்த்து மூலம் பதில் கொடுத்துள்ளார்.

ஆளுநர் வாழ்த்து:

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இந்த வாரம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில், ஆளுநர் சில மாற்றங்களை செய்ததால், ஆளும் திமுக அரசு இதை எதிர்த்து கண்டனம் போட்டது. இதனால் ஆளுநர், பாதியிலே வெளி நடப்பு செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அது மட்டும் இல்லாமல், தமிழக அரசுக்கு அனுப்பிய பொங்கல் அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிடாமல்  “தமிழகம்” என குறிப்பிட்டு இருந்தார். இது போன்ற சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வந்த இவர், தற்போது தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது, தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர், தனது பெயருக்கு முன்பு “தமிழ்நாடு ஆளுநர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, வழக்கம் போல் எப்போதும் தமிழ்நாடு என்ற பெயரையே அவரும் பின்பற்றத் தொடங்கி விட்டார் என்றும், தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here