வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக உருமாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு குலாப் புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த குலாப் புயலால் நாளை (26 செப்டம்பர் 2021) ஒடிசா மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தமால், கஞ்சம், ராயகாடா, கஜபதி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இப்புயல் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
5 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு – மகாராஷ்டிரா முதல்வர் ஒப்புதல்!!
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்