பாரதி கண்ணம்மா சீரியலில், வெண்பா கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை தன்னிடம் இருப்பதாக மிரட்டுகிறார். இன்னொரு பக்கம் நெஞ்சு வலியால் அவதி படும் அஞ்சலி உயிர் பிழைப்பாரா.. மாட்டாரா.. என்று விறுவிறுப்புடன் கதை போய்க்கொண்டிருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
இன்றைய எபிசோடில் அஞ்சலி வெண்பா தனக்கு கொடுத்த மாத்திரைகளை கையில் வைத்து கொண்டு போடலாமா.. வேண்டாமா.. என யோசித்து கொண்டிருக்க சௌந்தர்யா வருகிறார். இரண்டு இரண்டு மாத்திரைகளாக இருப்பதை பார்த்து விட்டு சௌந்தர்யா அஞ்சலியிடம் விசாரிக்கிறார்.
அப்பொழுது அஞ்சலி இது பாரதி எழுதிக்கொடுத்த மாத்திரைகள் ஆனால் இரண்டு மாத்திரைகளாக போட சொன்னது வெண்பா என்று கூறுகிறார். இதை கேட்ட சௌந்தர்யா, கோவப்பட்டு வெண்பா சொல்வதை கேக்காதே.. ஒரு ஒரு மாத்திரையாகவே எடுத்துக்கொள்ள சொல்கிறார். அஞ்சலியும் அவ்வாறே செய்கிறார்.
சௌந்தர்யா அங்கிருந்து சென்றவுடன் அஞ்சலிக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதன் பின்னர் வெண்பா கண்ணம்மாவிற்கு கால் செய்து மிஸஸ் பாரதி என்று கூப்பிட சொன்னதை மறந்துட்டயா என கண்ணம்மாவை மிரட்டுகிறார். பதிலுக்கு கண்ணம்மா கால் செய்ய கட் செய்கிறார்.
ஆத்திரமடையும் கண்ணம்மா, இதெல்லாம் சரியா வராது.. நேர்ல போய் வெண்பாவ நாலு அப்பு அப்புனா தான் சரியா வரும்.. என்று வெண்பா வீட்டிற்கு செல்கிறார். ஆனால் வெண்பா பக்காவாக காய்களை நகர்த்தி நீ பாரதியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
நான் விவாகரத்து பண்ணுனா நீ என்ன செய்வ என்று கண்ணம்மா கேக்க, நான் உன் குழந்தையை உன்கிட்டயே தரேன் என்று கூறுகிறார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் கண்ணம்மா அங்கிருந்து புறப்படுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்