சர்வதேச இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளின் முடிவில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வீரர் கே. எல். ராகுல் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது இந்தியாவிற்கு பாதகம் என்ற கருத்துக்கள் எழுகின்றன. ஏனென்றால் ஒருவேளை ராகுல் விலகினால் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் விளையாடுவார். தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ராணுவ படையினர் மோதல்: இதுவரை 9,000 பேர் உயிரிழப்பு., பரபரப்பான சூழலில் சூடான்!!!